- Advertisement -
தமிழ் மொழி இருக்கும் வரை கருணாநிதி பெயர் நீடித்திருக்கும்- துரைமுருகன்
கருணாநிதி பெருமையை ஒரு மாதம் பேசிக்கொண்டே இருக்கலாம் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு இலச்சினையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் கலைஞர் நூற்றாண்டு இலச்சினையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட, முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் துரைமுருகன், “கருணாநிதியால் நாங்கள் வளர்ந்தோம் என்பதே அவருக்கு நூற்றாண்டு விழா எடுப்பது பெருமை. கருணாநிதி பெருமையை ஒரு மாதம் பேசிக்கொண்டே இருக்கலாம். இந்தியாவில் பல தலைவர்களை உருவாக்கிய கிங் மேக்கர் கலைஞர். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்றுத் தந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. தமிழ் மொழி இருக்கும் வரை அவர் பெயர் நீடித்திருக்கும். அவர் பல குடியரசுத் தலைவர்கள், பிரதமர்களை அடையாளம் காட்டினார்” என்றார்.