Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னை மக்களுக்கு விரைவில் சீரான குடிநீர் வழங்கப்படும் - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி!

சென்னை மக்களுக்கு விரைவில் சீரான குடிநீர் வழங்கப்படும் – அமைச்சர் கே.என்.நேரு பேட்டி!

-

சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் சேதமடைந்துள்ள மெட்ரோ குடிநீர் குழாய்கள் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் மக்களுக்கு சீரான குடிநீர் வழங்கப்படும் எனவும் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்துள்ளார்.

சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், அம்பத்தூர் சட்ட மன்ற தொகுதியில் மக்கள் முதல்வரின் மனிதநேய திருநாள், சமுக தாகம் தீர்ப்போம், சுகாதாரத்தை காப்போம் என்ற தலைப்பில் குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அம்பத்தூர் டன்லப் மைதானத்தில் நடைபெற்றது. அம்பத்தூர் மண்டல குழு தலைவர் பி.கே. மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு, இந்துசமய அறநிலையத்துறை, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அமைச்சர் பி.கே. சேகர்பாபு, அம்பத்தூர் சட்ட் மன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர்கள் 771பேருக்கு 13 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு மற்றும் உதவி தொகைகளை வழங்கினர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் சேதமடைந்துள்ள மெட்ரோ குடிநீர் குழாய்கள் சீரமைக்கும் பணிகளை சிஎம்டிஏ மேற்கொள்ளபட்டு வருவதாகவும், சீரமைப்பு பணிகளுக்காக முதல்வர் 1000 கோடி ஒதுக்கியுள்ளதாகவும் விரைவில் மக்களுக்கு சீரான குடிநிர் விநியோகம் செய்யப்படும் என தெரிவித்தார்.

MUST READ