கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து வீட்டிற்கு சென்ற சிலர் மீண்டும் விஷச்சாராயம் குடித்ததாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேதனை தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 52 பேர் உயிரிழந்த சூழலில், நூற்றுக்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக ஐந்து தனிப்படைகள் அமைத்து சிபிசிஐடி போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக தற்போது வரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயம் குடித்து பலியானோர்களில். கள்ளக்குறிச்சியில் 28 பேரும், சேலத்தில் 17 பேரும், விழுப்புரத்தில் 4 பேரும், புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, விஷச்சாராயம் குடித்துவிட்டு மருத்துமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த சிலர் சென்ற பலர் மீண்டும் வீட்டில் மீதம் இருந்த விஷச்சாராயத்தை குடித்துவிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். விஷச்சாராயம் குடித்து 52 பேர் உயிரிழந்த நிலையில் ஆனால், விழிப்புணர்வின்மை காரணமாக மீண்டும் அவர்கள் அதையே குடிப்பதாக அமைச்சர் வேதனை தெரிவித்துள்ளார்.