அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான முறைகேடு புகார் வழக்கை மீண்டும் விசாரிக்க எம்.பி., எம்.எல்.ஏ. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரீ-ரிலீஸ் ஆகும் விஜயின் ‘கில்லி’….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
வீட்டுவசதி வாரிய முறைகேடு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை வழக்கில் இருந்து சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்திருந்தது. இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து விசாரணை நடத்தி வந்தார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் மீதான தீர்ப்பை இன்று (பிப்.26) காலை 10.30 மணிக்கு வழங்கியுள்ளனர்.
அப்போது நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்ததாவது, “வீட்டுவசதி வாரிய குடியிருப்பி வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டது ரத்துச் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான முறைகேடு புகார் வழக்கை மீண்டும் விசாரிக்க எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்திற்கு உத்தரவிடப்படுகிறது. வழக்கை விசாரிக்க தொடங்கிய பின் நாள்தோறும் விசாரிக்க வேண்டும். 2024- ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் வழக்கை மீண்டும் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிடப்படுகிறது. வரும் மார்ச் 28- ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராகி ஒரு லட்சம் ரூபாய்க்கு பிணை செலுத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதிகாரத்தில் இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நான்காவது முறையாக இணைகிறதா ‘ராட்சசன்’ பட காம்போ?
மேலும், முறையாக ஒப்புதல் பெற்று வழக்கை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் ஐ.பெரியசாமியை வழக்கில் இருந்து சென்னை கீழமை நீதிமன்றம் கடந்தாண்டு மார்ச் மாதம் விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.