
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என ஆளுநர் ரவியிடம் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மனு அளித்தனர்.
தலைமைச் செயலகத்தில் அமைச்சர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை!
நேற்று (ஜூன் 15) இரவு சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்களான சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர், டி.ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் நேரில் சந்தித்து, தி.மு.க. அமைச்சர் செந்தில் பாலாஜியைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தை வழங்கினர்.
அத்துடன், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் நீக்க வேண்டும் என ஆளுநரிடம் முன்னாள் அமைச்சர் வலியுறுத்தினர்.
பக்காவாக பிளான் போட்ட அமலாக்கத்துறை! படுத்துக்கொண்டு காலி செய்த செந்தில்பாலாஜி!பரபரப்பு பின்னணி
இதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சி.வி.சண்முகம் எம்.பி., “நீதிமன்றக் காவலில் உள்ள செந்தில் பாலாஜி, தொடர்ந்து அமைச்சராக நீடிப்பது சட்ட விரோதம். முதலமைச்சரும், அமைச்சர்களும் அவரைத் தியாகி போல் சித்தரித்துக் கொண்டிருக்கின்றனர். முந்தைய காலங்களில் அமைச்சர்கள் கைதான போது, அவர்கள் பதவியில் இருந்து நீக்கப்படுகின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.