Homeசெய்திகள்அரசியல்தலைமைச் செயலகத்தில் அமைச்சர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை!

தலைமைச் செயலகத்தில் அமைச்சர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை!

-

 

தலைமைச் செயலகத்தில் அமைச்சர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை!
Video Crop Image

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்தில் இன்று (ஜூன் 13) காலை 09.00 மணி முதல் மத்திய அமலாக்கத்துறையினர் பல்வேறு குழுவாகப் பிரிந்து அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

தேசிய மருத்துவ தகுதி தேர்வை கைவிட வேண்டும் – மு.க.ஸ்டாலின்

அதேபோல், கரூர் மாவட்டத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் கிருஷ்ணாபுரத்தில் உள்ள அவரது சகோதரர் அசோக் இல்லத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சி.ஆர்.பி.எஃப் படையினரின் பாதுகாப்புடன் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்திற்கு மத்திய பாதுகாப்புப் படையினருடன் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள், அங்கு அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லத்தில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்தியன் வங்கியின் அதிகாரிகளும் அமலாக்கத்துறைக்கு உதவியாக அமைச்சரின் அறையில் இருக்கின்றனர்.

இதனிடையே, கரூர் அருகே உள்ள செங்குந்தபுரம் பகுதியில் ஆடிட்டர் சதீஷ் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை நடந்து வரும் அனைத்து இடங்களிலும் ஆயுதம் ஏந்திய மத்திய பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

டாஸ்மாக் ஒப்பந்ததாரர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

தமிழகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய ஆறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ