![](https://www.apcnewstamil.com/wp-content/uploads/2023/06/senthil44-1-2.jpg)
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது அமலாக்கத்துறை.
சென்னை, கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, அவரது சகோதரர் அசோக் என்பவரது வீடு உள்ளிட்ட ஆறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள், நேற்று (ஜூன் 13) காலை 09.00 மணி முதல் அதிரடியாக சோதனை நடத்தி வந்தனர். மேலும், சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சரின் அறையிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர்.
சோதனை நடைபெற்ற இடங்களில் மத்திய பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் 17 மணி நேர சோதனைக்கு பிறகு செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
எந்த வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரியவில்லை என தி.மு.க. எம்.பி. என்.ஆர்.இளங்கோ பேட்டியளித்துள்ளார்.