spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவங்கதேசத்தில் உள்ள தமிழர்களின் குடும்பத்திற்கு உதவி செய்ய இந்திய தூதரகத்திற்கு முதலமைச்சர் உத்தரவு

வங்கதேசத்தில் உள்ள தமிழர்களின் குடும்பத்திற்கு உதவி செய்ய இந்திய தூதரகத்திற்கு முதலமைச்சர் உத்தரவு

-

- Advertisement -

போதை சாம்ரஜியத்தால் தமிழகம் சீரழிந்து வருகிறது - மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்

வங்கதேசத்தில் உள்ள தமிழர்களின் குடும்பத்திற்கு உதவி செய்ய இந்திய தூதரகத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்

we-r-hiring

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், “வங்கதேசத்தில் தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக தமிழர்கள் சிலர் தாயகம் திரும்ப இயலாமல் அங்கு சிக்கியிருப்பதாக தகவல்கள் வரப்பெற்றுள்ளன. வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரகம் அங்கு உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை கருதி, உள்ளூர் பயணங்களைத் தவிர்க்கவும். அவர்கள் வசிக்கும் வளாகத்திற்கு வெளியே தங்கள் நடமாட்டத்தைக் குறைக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்தை. வங்கதேசத்தில் உள்ள தமிழர்களின் விவரங்களைப் பெற்று. அவர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் விரைந்து வழங்கிடுமாறு உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் அடிப்படையில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம் அங்குள்ள இந்திய தூதரகம் மற்றும் தமிழ் அமைப்புகளை தொடர்பு கொண்டுள்ளது.

#Resign_Stalin

மேலும், அங்குள்ள நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு. தமிழர்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்ய தமிழ்நாடு அரசு தயார் நிலையில் உள்ளது.
வங்கதேசத்தில் உள்ள தமிழர்களின் குடும்ப உறுப்பினர்கள். தங்களுக்கு உதவி தேவைப்படும் நிலையில், தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறையின் 24×7 கட்டணமில்லா உதவி எண்களை தொடர்புகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்தியாவிற்குள் – +91 1800 309 3793 வெளிநாடு – +91 80 6900 9900 தொடர்புக்கு – +91 80 6900 9901” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

MUST READ