Homeசெய்திகள்தமிழ்நாடுசேலத்தில் அடுத்தடுத்து விலகும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்... அதிர்ச்சியில் சீமான்!

சேலத்தில் அடுத்தடுத்து விலகும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்… அதிர்ச்சியில் சீமான்!

-

- Advertisement -

நாம் தமிழர் கட்சியின் சேலம் ஒன்றிய பொறுப்பாளர் பால்பண்ணை ரமேஷ்,  சேலம் வடக்கு தொகுதி முன்னாள் பொருளாளர் மெய்யனூர் செல்வமூர்த்தி உள்ளிட்டோர் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சியின் சேலம் மாவட்ட நிர்வாகிகள் 700 பேர் இன்று காலை கட்சியில் இருந்து விலகுவாக அறிவித்தனர். தொகுதி செயலாளர் மணிவண்ணன், மாநில நிர்வாகி பாக்கியராஜன் ஆகியோர் மீதான அதிருப்தி காரணமாக விலகுவதாக அவர்கள் அறிவிதித்திருந்தனர். இது கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இது அடங்குவதற்குள்ளாக சேலம் மாவட்டத்தின் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான பால்பண்ணை ரமேஷ், மெய்யனூர் செல்வமூர்த்தி ஆகியோரும் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், நாம் தமிழர் கட்சியின் சேலம் மேற்கு தொகுதி, சேலம் ஒன்றிய பொறுப்பாளர் பால்பண்ணை ரமேஷ் மற்றும் சேலம் வடக்கு தொகுதி முன்னாள் பொருளாளர் மெய்யனூர் செல்வமூர்த்தி ஆகிய தாங்கள் தங்களுடன் பயணித்த  50-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இன்று முதல் நாம் தமிழர் கட்சியிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.

மேலும் இதுநாள் வரை தங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய உறவுகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் பால்பண்ணை ரமேஷ், மெய்யனூர் செல்வமூர்த்தி ஆகியோர் அறிவித்துள்ளனர். ஒரே நாளில் சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ