spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநேர்மையான அரசியல் பாதையாகவும் பாடமாகவும் திகழ்பவர் நல்லக்கண்ணு – வாழ்த்திய விஜய்

நேர்மையான அரசியல் பாதையாகவும் பாடமாகவும் திகழ்பவர் நல்லக்கண்ணு – வாழ்த்திய விஜய்

-

- Advertisement -

தவெகவின் தலைவா் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் திரு.நல்லக்ண்ண அய்யாவிற்கு வாழ்த்தை தெரிவித்துள்ளாா். நேர்மையான அரசியல் பாதையாகவும் பாடமாகவும் திகழ்பவர் நல்லக்கண்ணு – வாழ்த்திய விஜய்

அரசியலைத் தங்கள் அடையாளமாக ஆக்கிக் கொண்டவர்கள் மத்தியில், அரசியலுக்கே ஒரு தனித்த பெரும் அடையாளமாகத் திகழ்பவர், மரியாதைக்குரிய திரு.நல்லக்கண்ணு அய்யா. சுதந்திரப் போராட்டக் களத்தில் நின்றவர். பிறகு பொதுவுடைமை இயக்கத்தில் தன்னை ஒப்படைத்துக் கொண்டவர். சிறைக் கொட்டடிகளைச் சிரித்துக்கொண்டே சிநேகித்தவர். தடைகளைத் தகர்த்த தனிப்பெரும் தளகர்த்தர்.

we-r-hiring

சாதிய வன்மத்திற்கு எதிராகக் களமாடியவர் மட்டுமன்று. வாழ்ந்து காட்டியவர். சமூக நீதியை, சமத்துவத்தை நிலைநாட்டியவர். தன் வாழ்நாள் முழுமைக்கும் அதை வாழ்ந்து காட்டியே நிரூபித்துக் கொண்டிருப்பவர். தமிழகத்தின் தனிப்பெரும் சமூக, அரசியல் அடையாளமாக உயர்ந்து நிற்பவர்.

தங்களுக்கான நிதியை மட்டுமே திரட்டும் அரசியலாளர்கள் இடையே, தனக்குக் கிடைத்த நிதி அனைத்தையும் தான் சார்ந்த இயக்கத்திற்கும் விவசாயிகளுக்கும் அரசுக்கும் கொடுத்த உத்தமர்.

தலைவனாக வருவது முக்கியமன்று. தலைவனாக வாழ்ந்து காட்டுவதே முக்கியம் என்ற இலக்கணத்திற்கு இன்றுவரை ஒற்றை உதாரணம், நேர்மையின் ஊற்றுக்கண்ணான திரு.நல்லக்கண்ணு அய்யா மட்டுமே. அவரே, நம் தலைமுறைக்கான நேர்மையான அரசியல் பாதையாகவும் பாடமாகவும் திகழ்பவர்.

நூற்றாண்டு காணும் அவரைப் போற்றிப் புகழ்ந்து வணங்குவோம். அய்யாவின் உடல்நலம், மனநலம், சிந்தனை வளம் நீடித்து நிலைக்க இறைவனை வேண்டுகிறேன் என்று கூறியுள்ளாா்.

இலவச வேட்டி, சேலைகளை ஜன. 10-க்குள் ரேஷன் கடைகளுக்கு அனுப்ப உத்தரவு

MUST READ