Homeசெய்திகள்தமிழ்நாடுநாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைக்குமா? தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை

நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைக்குமா? தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை

-

சீமான் - Seeman

நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் நாம் தமிழர் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது

.நாடாளுமன்ற தேர்தலில் 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் கூட்டணியின்றி தனித்த போட்டியிட உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இதன்படி, நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் சில நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களையே அறிவித்துள்ளது. இந்நிலையில் தான் நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னத்தை பாரதிய பிரஜா ஐக்யதா கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதால் நாம் தமிழர் கட்சிக்கு அச்சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பிரபல நடிகருக்கு அப்பாவாக நடிக்கும் சீமான்..... வெளியான புதிய தகவல்!

இந்நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சங்கர் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகுவை நேரில் சந்தித்து மனு அளித்தனர். தேர்தல் ஆணையத்தின் முடிவை பொறுத்தே நாம் தமிழர் கட்சிக்கு மீண்டும் கரும்பு சின்னம் கிடைக்குமா? அல்லது வேறு சின்னம் ஒதுக்கப்படுமா என்பது தெரியவரும்.

MUST READ