
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற வள்ளலாரின் 200வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க.வின் தலைவரும்,தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், “ஆன்மிக உணர்வைப் பயன்படுத்தி ஒரு கூட்டம் அரசியல் செய்கிறது. அறிவு பசி மற்றும் வயிற்று பசியைப் போக்கும் விழாவாக வள்ளலார் விழா நடைபெற்றது.

இலக்கிய துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு!
வள்ளலார் நிகழ்ச்சி நடத்தியது மூலம் பிளவு சக்திகள் மங்கிப் போவார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூபாய் 3,500 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. எங்கு சென்றாலும் தமிழ்நாடு, தமிழக கோயில்கள் பற்றி தான் பிரதமர் நரேந்திர மோடி பேசி வருகிறார். தமிழகத்தில் சுமார் 1,000 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தியுள்ளோம்.
தமிழகத்தில் கோயில்களை தி.மு.க. அரசு கைப்பற்றி ஆக்கிரமித்துள்ளதாக பிரதமரின் கருத்தை மறுக்கிறேன். கோயில் சொத்துகள், வருமானத்தை முறைகேடாகப் பயன்படுத்துவதாக பிரதமரின் குற்றச்சாட்டை மறுக்கிறேன். தமிழக கோயில்கள் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியின் கருத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
நைஜரில் பயங்கரவாத தாக்குதல்- 29 ராணுவ வீரர்கள் படுகொலை
அனைத்து உயிரும் ஒன்று என்ற எண்ணத்தை விதைக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.