Homeசெய்திகள்தமிழ்நாடுஎனக்கும் முதல்வர் ரங்கசாமிக்கும் கருத்து வேறுபாடா?- தமிழிசை விளக்கம்

எனக்கும் முதல்வர் ரங்கசாமிக்கும் கருத்து வேறுபாடா?- தமிழிசை விளக்கம்

-

- Advertisement -

எனக்கும் முதல்வர் ரங்கசாமிக்கும் கருத்து வேறுபாடா?- தமிழிசை விளக்கம்

நான் போட்டு இருக்கும் கோட்டும் White… நோட்டும் White… என ரூ.2000 நோட்டுகள் தடை செய்யப்பட்டது குறித்து ஆளுநர் தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார்.

3 மசோதாக்களுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை ஒப்புதல்

புதுச்சேரி தனியார் கல்லூரி விழாவில் பங்கேற்ற ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “பள்ளி மற்றும் கல்லூரி தேர்வில் தோல்வியுற்ற மாணவன் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது. தேர்வு என்பது வாழ்க்கையில் ஒரு பகுதி தான். வாழ்க்கை இன்னும் நிறைய இருக்கிறது. தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும், இது குறித்து முதலமைச்சர், கல்வி அமைச்சர் ஆகியோருடன் கலந்து ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஆளுநருக்கு அதிகாரம் என்பதில் புதுச்சேரியில் ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் எந்த வகையிலாவது கருத்து வேறுபாடு வருமா..? என்று முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி காத்துக் கொண்டிருக்கிறார். துணைநிலை மாநிலங்களின் சட்டங்களில் வரையறை உள்ளது, முதலமைச்சரிடமிருந்து வரும் கோப்புகளுக்கு உடனே நான் ஒப்புதல் அளிக்கிறேன். இது நாராயணசாமிக்கு கவலையாக உள்ளது. கருத்து வேறுபாடு வராது. டெல்லி நிலை வேறு மற்ற யூனியன் பிரதேசங்களுக்கான நிலை வேறு.. 2000 ரூபாய் தடை செய்யப்பட்டது குறித்து தெரியாது.. எனக்கு கவலை இல்லை. நான் போட்டு இருக்கும் கோட்டும் White…நோட்டும் White….” என பதில் அளித்துள்ளார்.

MUST READ