
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்கப்பட்டது.
“உடன்பாடு இல்லாத உரைக்கு எதற்காக ஒப்புதல்?”- முரசொலி!
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்று (பிப்.14) நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் இருக்கைகள் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஏற்கனவே தேர்வான நிலையில் அவருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின் ஆர்.பி.உதயகுமார் எதிர்க்கட்சித் துணைத் தலைவராகத் தேர்வானார். ஆர்.பி.உதயகுமாருக்கு இருக்கை ஒதுக்க சபாநாயகரிடம் அ.தி.மு.க. சார்பில் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டது. எடப்பாடி பழனிசையின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டுமென முதலமைச்சர் நேற்று பேரவையில் பேசியிருந்த நிலையில் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இயக்குநர் பாக்யராஜின் குற்றச்சாட்டும், காவல்துறையின் விளக்கமும்!
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பேரவையில் இரண்டாவது வரிசையில் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது வரிசையில் முன்னாள் சபாநாயகர் தனபால் அருகே ஓ.பன்னீர்செல்வத்திற்கு இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் மனோஜ் பாண்டியனுக்கு ஆர்.பி.உதயகுமார் அமர்ந்திருந்த இடம் அளிக்கப்பட்டுள்ளது.