‘நெஞ்சு பொறுக்குதில்லையே’ என்னும் பெயரில் இயக்குநர் பாக்யராஜ் கூறியுள்ள தகவல் பொய்யானது என கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.
இலங்கை, மொரீஷியஸ் நாடுகளில் யுபிஐ சேவை அறிமுகம்!
நடிகரும், பிரபல திரைப்பட இயக்குநருமான பாக்யராஜ், ‘நெஞ்சு பொறுக்குதில்லையே’ என்ற தலைப்பில் எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோயில் அருகே அம்பரம்பாளையம் ஆற்றில் குளிக்க வருவோரை சிலர் தண்ணீரில் மூழ்கடித்துக் கொல்லப்படுகின்றனர். அவர்களின் உடல்களை மீட்க பணம் தருவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிய நிலையில், அது குறித்து கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் விளக்கம் அளித்துள்ளார். அதில் பாக்யராஜின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது எனவும், பத்ரகாளியம்மன் கோயில் அருகே உள்ள ஆற்று பகுதியில் 2022- 2023 ஆம் ஆண்டுகளில் எவ்வித உயிரிழப்பும் நடைபெறவே இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
பிப்.17- ஆம் தேதி GSLV-F14 ராக்கெட் விண்ணில் பாய்கிறது!
மேட்டுப்பாளையம் உயிர் காக்கும் காவல்படை உருவாக்கப்பட்டதை அடுத்து, கடந்த ஆண்டு பவானி ஆற்றில் மூழ்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வதந்தியை உருவாக்குவதும், பரப்புவதும் குற்றச்செயல் என்றும் கூறியுள்ளார்.