spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு2 ஆண்டுகளில் அரிசியின் விலை படிப்படியாக உயர்வு

2 ஆண்டுகளில் அரிசியின் விலை படிப்படியாக உயர்வு

-

- Advertisement -
2 ஆண்டுகளில் அரிசியின் விலை படிப்படியாக உயர்வு
ஏற்றுமதி அதிகரிப்பு மற்றும் ஜிஎஸ்டி வரிவிதிபால் கடந்த 2 ஆண்டுகளில் அரிசியின் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது.

2 ஆண்டுகளில் அரிசியின் விலை படிப்படியாக உயர்வு

உணவின் முக்கிய மூலப்பொருளாக இருக்கக்கூடிய அரிசி பல ரகங்களில் பல விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

we-r-hiring

அண்மையில் அரிசிக்கு வந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பால் கிலோவிற்கு 3 முதல் 6 ரூபாய் வரை விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெளிநாடுகளில் தேவை அதிகரித்து உள்ளதால் இந்தியாவில் இருந்து அனைத்து வகையான அரிசிகளும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

2 ஆண்டுகளில் அரிசியின் விலை படிப்படியாக உயர்வு

இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அரிசியின் விலை படிப்படியாக அதிகரித்து உள்ளது. குறிப்பாக பாசுமதி அரிசி கிலோவிற்கு ரூ. 20 ரூபாய் அதிகரித்து உள்ளது. அதில் இந்த மாதத்தில் மட்டும் 10 ரூபாய் அதிகரித்து கிலோ 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாங்கக்கூடிய அரிசி வகைகள் அனைத்தும் பலமடங்கு உயர்ந்து உள்ளது.

அதில் 600 ரூபாய்க்கு விற்பனையான 25 கிலோ அடங்கிய ஒரு மூட்டை அரிசி தற்போது 900 ரூபாய்க்கு விற்பனையாகிறது. முன்னணி பிரான்ட அரிசிகளான மகாராஜா, சிவாஜி பிராண்டுகளின் 25 கிலோ மூட்டை 1550 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

2 ஆண்டுகளில் அரிசியின் விலை படிப்படியாக உயர்வு

இது தொடர்பாக வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்ரமராஜா அளித்த பேட்டியில் அத்தியாவசிய உணவுப் பொருளான அரிசிக்கு ஒன்றிய அரசு வரி விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

தமிழ்நாட்டுக்கு போதுமான அரிசியை கையில் வைத்துக்கொண்டு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றும் இல்லையெனில் தமிழகத்தில் விலைவாசி உயர்வு என்பது ஏற்படும் என்றும் விக்ரமராஜா எச்சரித்தார்.

MUST READ