spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஒரே நாளில் வேட்பாளர் நேர்காணலைத் தொடங்கும் தி.மு.க., அ.தி.மு.க.!

ஒரே நாளில் வேட்பாளர் நேர்காணலைத் தொடங்கும் தி.மு.க., அ.தி.மு.க.!

-

- Advertisement -

 

பா.ஜ.க. கூட்டணி குறித்து மறுபரிசீலனை?- கூடுகிறது அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!
Photo: ADMK

தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. ஒரே நாளில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் நேர்காணலை இன்று (மார்ச் 10) தொடங்கவுள்ளன.

we-r-hiring

“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் தேர்வு மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு உள்ளிட்டப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கான வேட்பு மனுக்களை வழங்கலாம் என அறிவித்துள்ளனர்.

அதன்படி, இரு கட்சிகள் சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்பட்ட நிலையில், தி.மு.க. சார்பில் விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று (மார்ச் 10) நடைபெறுகிறது. தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேர்காணலை நடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளை ஒதுக்கிய தி.மு.க.!

அப்போது, அவர் தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு குறித்து கேட்டறியவுள்ளார். இதேபோல், அ.தி.மு.க. சார்பில், ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றும், நாளையும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல் நடைபெறுகிறது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேர்காணலை நடத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் இந்த இரு கட்சிகளும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ