Homeசெய்திகள்தமிழ்நாடுஅனைத்து அரசு பல்கலைகழகங்களுக்கும் ஒரே பாடத்திட்டம்…கல்லூரி பேராசிரியர்கள் எதிர்ப்பு…

அனைத்து அரசு பல்கலைகழகங்களுக்கும் ஒரே பாடத்திட்டம்…கல்லூரி பேராசிரியர்கள் எதிர்ப்பு…

-

- Advertisement -

அனைத்து அரசு பல்கலைகளுக்கும் ஒரே பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளதால் உயர்கல்வித் துறையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.ஒரே பாடத்திட்ட முறைக்கு  அனைத்து பேராசிரியர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில்,கலை அறிவியல் படிப்புகளை நடத்தும் வகையில் 13 அரசு பல்கலைகழகங்கள் செயல்பட்டு வருகின்றன.இவை அனைத்திற்கும் சேர்த்து ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை தமிழக உயர்கல்வி மன்றம் வழியே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் இம்முறையினையே பல்கலைகழகங்கள் பின்பற்ற வேண்டும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.இதற்கு பல்கலைகழகங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

கல்லூரி ஆசிரியர்களின் கூட்டுக்குழுவான ’ஜாக்’அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் நாகராஜன் கூரியது;

மத்திய அரசின் யு.ஜி.சி.விதிகளையும் ,தமிழகத்தில் ஒவ்வொரு பல்கலைக்கும் உரிய தனிப்பட்ட சட்டங்களை மீறுவதாக இந்த ஒரே  பாடத்திட்ட நடவடிக்கை உள்ளதாக கூறினார்.

பல்கலைகழக மானிய குழுவான யு.ஜி.சி.வழங்கிய ,உயர் கல்வி நிறுவனம் தன்னாட்சி அதிகாரத்தையும், உரிமைகளையும் பறிக்கும் வகையில்,ஒரே பாடத்திட்ட நடவடிக்கை உள்ளது.

இதை எந்த பல்கலையும் ஏற்காது.கல்லூரியும் ஏற்றுக்கொள்ளாது.ஒவ்வொரு பல்கலையும் அந்தந்த பகுதிகளின் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு மொழி,கலை,புவியியல்,இலக்கியம்,வேளாண்மை மற்றும் வாழ்வியல் சூழ்நிலைக்கு ஏற்ப அறிவியல் சார்ந்த சூழ்நிலைக்கு ஏற்ப பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தியா மட்டுமின்றி,அனைத்து நாடுகளிலும் இம்முறைதான் பின்பற்றபட்டு வருகின்றன.

மேலும் கல்லூரிகள் மற்றும் பல்கலைகள் பேராசிரியர்களின் படிப்புகள் அவர்களின் ஆராய்ச்சி திட்டங்கள் அடிப்படையில் தான்,பாடத்திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.ஆதலால் இம்முறையானது சாத்தியமற்றது.

மேலும், பல்கலைகளில் உள்ள,”போர்டு ஆப் ஸ்டடிஸ் “என்ற கல்வி குழுவினர் தான் பாடத்திட்டங்களை உருவாக்குவர்.அதற்கு கவுன்சிலும்,சிண்டி கேட் குழுவும் ஒப்புதல் வழங்கும்.

மேலும் கல்விக்குழும உறுப்பினர்களும்,பாடத்திட்டமும்,3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றப்படும்.இந்த நடைமுறைகளை மீறி,ஒரே பாடத்திட்டம் கொண்டுவருவது சட்டத்தை மீறும் செயல் என அவர் கூறினார்.

தமிழக அரசின்  ஒரே பாடத்திட்ட நடைமுறையை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் கல்லூரிகளின் பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர். வரும் 21 ஆம் தேதி பல்கலைகளின் முன் ஆர்ப்பாட்டமும்,25 ஆம் தேதி உயர்கல்வி மன்றத்தை முற்றுகையிட்டுப் போராட்டமும் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர்.

MUST READ