எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண்
விருதுநகர் மாவட்டம் ஜோகில்பட்டியைச் சேர்ந்த முத்தமிழ் செல்வி எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்துள்ளார்.
முத்தமிழ் செல்வி கடந்த மாதம் எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்காக தமிழக அரசிடம் நிதி உதவி வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்ற தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் அழைத்து, அவருக்கு 10 லட்சம் அரசு சார்பில் உதவி வழங்கினார். அத்துடன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 15 லட்சம் தன் சார்பாக கொடுத்தார்.
உலகின் மிக உயர்ந்த எவெரெஸ்ட் சிகரத்தை 38 நாள் பயணத்தைக் கடந்து 7 ஆயிரத்து 150 மீட்டர் ஏறி சாதனை படைத்துள்ள சகோதரி முத்தமிழ்செல்வி-க்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்!#Everest #tamilnadu #TamilNews #india #VanathiBJP #viruthunagar #achievement #celebrate #BJP4IND #IndiaNews pic.twitter.com/FnY0EGJcXA
— Vanathi Srinivasan (@VanathiBJP) May 27, 2023

இதையடுத்து தனது சாதனை பயணத்தை தொடங்கிய முத்தமிழ் செல்வி, கடந்த 23ம் தேதி எவரெஸ்ட் சிகரம் 8,848.86 மீட்டர் அடைந்து அங்கேயே வீடியோ பதிவு செய்து அதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பயிற்சியாளர் திரிலோகசந்தர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்திருந்தார். தமிழ்நாட்டிலிருந்து முதல் பெண்மணியாக வெற்றிகரமாக எவரஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து அடிவாரம் திரும்பியுள்ளார் முத்தமிழ்செல்வி.
இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், “உலகின் மிக உயர்ந்த எவெரெஸ்ட் சிகரத்தை 38 நாள் பயணத்தைக் கடந்து 7 ஆயிரத்து 150 மீட்டர் ஏறி சாதனை படைத்துள்ள சகோதரி முத்தமிழ்செல்வி-க்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்!” என டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.