Homeசெய்திகள்தமிழ்நாடுஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தாக்கல் செய்த மனு தள்ளுபடி - உச்சநீதிமன்றம் அதிரடி!

ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தாக்கல் செய்த மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம் அதிரடி!

-

உச்சநீதிமன்றம்

கோயம்பேட்டில் இருந்தே பேருந்துகளை இயக்க அனுமதிகோரி ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளை நிறுத்த போதிய இடவசதி இல்லை என குற்றம் சாட்டிய ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், கோயம்பேட்டில் இருந்தே பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவர்களது கோரிக்கையை போக்குவரத்து துறை நிராகரித்த்தது. இதனையடுத்து, இது தொடர்பாக அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றமும் கோயம்பேட்டில் இருந்து தற்காலிகமாக ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதி அளித்தது.

இந்த நிலையில், பேருந்து உரிமையாளர்கள் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கோயம்பேட்டில் இருந்தே பேருந்துகளை இயக்க அனுமதிகோரி ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இவ்வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் போது, ஏன் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் போது உங்கள் வாதங்களை முன்வைக்கலாம் என கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

MUST READ