Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

தமிழகத்தில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

-

- Advertisement -

 

தமிழகத்தில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

தமிழகம் மட்டுமின்றி, உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

காது சம்பந்தமான பிரச்சனைகளும் அதன் தீர்வுகளும்!

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சென்னை சாந்தோம் தேவாலயம் வண்ண மின்விளக்குகளால் ஜொலித்தது. சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

உலகம் முழுவதும் அமைதி திரும்ப விரும்புவதாக பெல்ஜியத்தைச் சேர்ந்த கிறிஸ் கூறினார். உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி தேவாலயத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். நள்ளிரவில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். நாகை மட்டுமின்றி பிற மாவட்ட மக்களும் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ள தூத்துக்குடியில் பனிமய மாதா தேவாலயத்தில் மக்கள் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் மீண்டு வர வேண்டும் என பிரார்த்தனை செய்தனர்.

கைகளின் நிறம் அதிகரிக்க சூப்பரான டிப்ஸ் இதோ!

இதேபோல், நெல்லை, கன்னியாகுமரியில் உள்ள தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. புதுச்சேரியிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டின.

MUST READ