
வரும் ஜனவரி 1- ஆம் தேதி வரை நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
தள்ளிப்போகிறதா ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம் பட ரிலீஸ்?
கனமழை, வெள்ளப் பாதிப்பு காரணமாக, கடந்த டிசம்பர் 4- ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில், நெல்லையில் 9- ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் இன்று (டிச.22) பள்ளிகள் திறக்கப்பட்டன.
டிமான்ட்டி காலனி பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் பூஜா ஹெக்டே!
இந்த சூழலில், நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “9- ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை இன்னும் ஒரு சில தேர்வுகள் நடைபெறவில்லை. நாளை (டிச.23) முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஜனவரி 1- ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. மழையால் விடுபட்ட அரையாண்டுத் தேர்வுகள், ஜனவரி 2- ஆம் தேதிக்கு பிறகு நடைபெறும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.