‘உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்’ நாளை தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படவுள்ளதாக தலைமை செயலாளர் சிவ தாஸ் மீனா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்துக்கே வரும்’உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதியதிட்டத்தை முதல் வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்தத் திட்டத்துக்கான வழி காட்டு நெறிமுறைகள் வெளியிடப் பட்டுள்ளன. அதன்படி, ‘உங்களைத் தேடி உங்கள் வஊரி திட்ட முகாமானது மாவட்டத்துக்கு உட்பட்ட ஒரு குறிப்பிட்ட வட்டத்தில் ஒவ்வொரு மாதமும் நான்காவது புதன்கிழமை நடத்தப்படும். அந்த நாள் விடுமுறை தினமாக இருக்கும்பட்சத்தில் அதற்கு அடுத்த வேலை நாளில் முகாம் நடத்தப்படும். ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெறும் வட்டம் குறித்த தகவலை முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
24 மணி நேரம் தங்க வேண்டும்! முகாம் நடைபெறும் வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் இதர அதிகாரிகள் என அனைவரும் 24 மணி நேரம் தங்கியிருக்க வேண்டும். அதாவது, முதல் நாள் காலை 9 மணிக்குத் தொடங்கி மறுநாள் காலை 9 மணிவரை அதே வட்டத்தில் இருக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அதிகாரி, மகளிர் திட்ட அதிகாரி , வேளாண்மை, கால்நடை, சுகாதாரத்துறை துறைகளின் இணை இயக்குநர்கள், நெடுஞ்சாலை, பொது சுகாதார துணை இயக்குநர் , நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர், ஊராட்சித் துறை உதவி இயக்குநர், முதன்மைக் கல்வி அதிகாரி, மாவட்ட சமூக நல அதிகாரி ஆகியோர் திட்ட முகாமில் பங்கேற்க வேண்டும். முற்பகல் நேரத்தில் முகாம் நடைபெறும் பகுதிகளில் கள ஆய்வை மேற்கொள்ளலாம். குறிப்பாக, ஆரம்ப சுகாதார மையங் கள், மருத்துவமனைகள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட மையங்கள், பள்ளிகள், சத்துணவுக் கூடங்கள், முதல்வரின் காலை உணவுத் திட்டம் ஆதரவற்றோர் விடுதிகள் பெண்கள் விடுதிகள் ஆகியவற்றின் செயல்பாடுகளை நேரில் ஆய்வு வேண்டும்.
பிற்பகல் நேரத்தில் வட்டத்திலுள்ள அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும். அப்போது, களஆய்வின் போது கிடைத்த தகவல்களை பகிர்ந்து கொண்டு அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும். மாலை நேரத்தில் சம்பந்தப்பட்ட வட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தெருவிளக்குகளின் செயல்பாடு, பூங்காக்கள், நூலகங்கள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்ய வேண்டும். மறுநாள் அதிகாலையில், அந்த வட்டத்தில் விநியோகிக்கப்படும் குடிநீர், தூய்மைப்பணி, பொது மற்றும் சமுதாய கழிப்பறைகள், பால் விநியோகம், பொதுப் போக்குவரத்து சேவை, முதல்வரின் காலை உணவுத் திட்டம் ஆகியவற்றை ஆய்வு செய்ய வேண்டும். உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் கண்டறிந்த அம்சங்களை ஆவனாமாகத் தயாரித்து. வருவாய் நிர்வாக ஆணையருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.