Homeசெய்திகள்தமிழ்நாடுதொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலை - அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!

தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலை – அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!

-

- Advertisement -

தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைவு

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.54,200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச பொருளாதாரம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு சவரன் ரூ,53,240-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன் தினம் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் ரூ,53,760-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போல், நேற்றும் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ,53,920-க்கு விற்பனை செய்யப்பட்டது.

உலக அளவில் தங்கத்தின் விலை உயர்வுக்கு சீனாவே காரணம்

இந்த நிலையில், இன்றைய ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ,54,200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் 6,775-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரை கிராமுக்கு ரூ.1.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.102.20-க்கும் பார் வெள்ளி ரூ1,02,200,-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்றும் தங்கம் விலை உயர்ந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 

 

MUST READ