சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.53,600-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சர்வதேச பொருளாதார நிலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களாக தினமும் தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.53,560-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய தங்கம் விலையானது முந்தைய நாள் விலையில் எந்த மாற்றமுமின்றி தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.53,600 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரணத்தங்கம் கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,700-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.