Homeசெய்திகள்தமிழ்நாடுசற்று உயர்ந்த ஆபரண தங்கத்தின் விலை - சவரனுக்கு ரூ.40 உயர்வு!

சற்று உயர்ந்த ஆபரண தங்கத்தின் விலை – சவரனுக்கு ரூ.40 உயர்வு!

-

- Advertisement -

தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்வு

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,520க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச பொருளாதார நிலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களாக தினமும் தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.53,328க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.19 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,685க்கு விற்பனை செய்யப்பட்டது. ஞாயிற்று கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலை எவ்வித மாற்றமும் இல்லை. நேற்று ஆபரண தங்கத்தின் விலையானது ஒரு சவரன் ரூ.53,480க்கு விற்பனை செய்யப்பட்டது.

அட்சய திருதியை - தங்கம் விலை 2-வது முறை உயர்வு

இந்த நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,520க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,690க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

MUST READ