spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலை - ஒரு சவரன் ரூ.50,000ஐ நெருங்குகிறது!

தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலை – ஒரு சவரன் ரூ.50,000ஐ நெருங்குகிறது!

-

- Advertisement -

சென்னையில் இன்று 22 கேரட் தங்கம் விலை சவரனுக்கு 360 உயர்ந்து ஒரு சவரன் 49,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

we-r-hiring

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்தது. இதன் மூலம் ஒரு கிராம் தங்கம் ரூ.6,105க்கு விற்பனையானது. மேலும் சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.48,840க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்துள்ளது. இதனைத்தொடர்ந்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.45 உயர்ந்து, ரூ. 6,150க்கு விற்பனையாகிறது.

இதன் மூலம் ஒரு சவரன் ஆபரண தங்கம் 49,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஒரு சவரன் தங்கத்தின் விலை 50 ஆயிரம் ரூபாயை நெருங்குவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுவரை இல்லாத வகையில் தங்கம் விலையானது புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

MUST READ