spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஒடிசா ரயில் விபத்தில் தமிழகத்தைச் சோ்ந்தவா்களுக்கு பாதிப்பில்லை- உதயநிதி ஸ்டாலின்

ஒடிசா ரயில் விபத்தில் தமிழகத்தைச் சோ்ந்தவா்களுக்கு பாதிப்பில்லை- உதயநிதி ஸ்டாலின்

-

- Advertisement -

ஒடிசா ரயில் விபத்தில் தமிழகத்தைச் சோ்ந்தவா்களுக்கு பாதிப்பில்லை- உதயநிதி ஸ்டாலின்

ஒடிசாவில் இருந்து சென்னை திரும்பிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ரயில் விபத்து மற்றும் மீட்பு பணிகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கோரமண்டல் ரயிலில் பயணம் செய்த தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளனர். நேற்று ஒடிசாவில் இருந்து சென்னை கிளம்பும் போது 8 பேர் குறித்த தகவல் தெரியாமல் இருந்தது. ஆனால் அவர்கள் நலமுடன் உள்ளார்கள். ஒடிசாவிலிருந்து புறப்பட்ட போது 8 பேர் பற்றி தகவல் இல்லை. நேற்றிரவு அதில் 2 பேரிடம் பேசிய போது, 8 பேரும் நலமோடு உள்ளதாக தெரிந்து கொண்டேன். அவர்கள் பயணித்த ரயில் பெட்டியில் பெரிய பாதிப்பு இல்லை. விரைவில் மற்ற 6 பேருடனும் விரைவில் பேசுவேன். 2 நாட்களில் முழு தகவல் தெரியும். பிரதமர் வருகிறார் என்பதால், ரயில் விபத்து நடந்த இடத்திற்கு எங்களை அனுமதிக்கவில்லை.

we-r-hiring

Image

ஒடிசாவில் சுமார் ஒரு மணிநேரம் மருத்துவமனையில் இருந்தோம். பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆலோசனை கூறினோம்.சடலங்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்ததை பார்க்கும்போது மனத்துக்கு மிகவும் வேதனையாக இருந்தது” எனக் கூறினார்.

MUST READ