spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதிரையரங்குகளில் முதல் நாள் சிறப்புக் காட்சிகள், உடனடியாக இரத்து செய்யப்பட வேண்டும்-வேல்முருகன் வலியுறுத்தல்.

திரையரங்குகளில் முதல் நாள் சிறப்புக் காட்சிகள், உடனடியாக இரத்து செய்யப்பட வேண்டும்-வேல்முருகன் வலியுறுத்தல்.

-

- Advertisement -

தமிழக மக்களின் உரிமைக்காகத் தொடர்ந்து போராடி வரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, திரையரங்குகளில் நடைபெறும் முதல் நாள் சிறப்புக் காட்சிகள் குறித்து தீவிரக் கவலை கொள்கிறது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளாா்.திரையரங்குகளில் முதல் நாள் சிறப்புக் காட்சிகள், உடனடியாக இரத்து செய்யப்பட வேண்டும் என வேல்முருகன் வலியுறுத்தியுள்ளாா்.

மேலும், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”பண்டிகை நாட்களில் அல்லது புதியத் திரைப்படங்கள் வெளியாகும் முதல் நாளில், அதிகாலை, காலை, சிறப்புக் காட்சிகள் எனப்படும் தனிக் காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இது நேரடியாகப் பொதுமக்களின் வாழ்க்கையில் சுமையையும், ஒழுங்கின்மையையும் உருவாக்குகிறது.

we-r-hiring

ஏன் சிறப்புக் காட்சிகள் இரத்து செய்யப்பட வேண்டும்?

1.அரசு நிர்ணயித்தக் காட்சி நேரம் மாற்றி அமைக்கப்படுவதோடு, டிக்கெட்டுகளின் விலையும் விதிகளை மீறி விற்கப்படுகின்றன.

2.சட்ட ஒழுங்கு சீர்குலைவு, அதிகாலைக் காட்சிகளால் கூட்ட நெரிசல், சண்டை, போக்குவரத்துத் தடங்கல் மற்றும் விபத்துகள் ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன.

3.மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதோடு, பள்ளிக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைத் தவிர்க்கும் நிலையும் உள்ளது.

4.சமூகத்துக்கு தீங்கையும், பொதுமக்களுக்கு அன்றாடப் பயணத்தில் சிரமத்தையும், குடும்பங்களுக்குப் பொருளாதாரச் சுமையையும் ஏற்படுத்துகிறது.

சிறப்பு காட்சிகள் என்ற பெயரில், சமூகச் சீர்கேடுகளை அனுமதிக்க முடியாது.  எனவே, தமிழக அரசு உடனடியாக முதல் நாள் சிறப்புக் காட்சிகளை முழுமையாக இரத்து செய்ய வேண்டும் என்றும், அரசு நிர்ணயித்தக் காட்சி நேரங்கள் மற்றும் டிக்கெட் விலை, கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், விதிகளை மீறுபவர்களின் மீது, கடுமையானச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.

திரைப்படம் கலை அனுபவமாக இருக்க வேண்டும். அது சிலத்தனியாரின் இலாபத்திற்காக, மக்களின் மீது திணிக்கப்பட்டச் சுமையாக மாறக் கூடாது. எனவே, முதல் நாள் சிறப்புக் காட்சிகளை உடனடியாக இரத்து செய்யத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது என வேல்முருகன் தெரிவித்துள்ளாா்.

2 கோடி ரூபாய் மதிப்பிலான 320 கிலோ கஞ்சா பறிமுதல்!! மடக்கி பிடித்த போலீஸ்…

MUST READ