Homeசெய்திகள்தமிழ்நாடுமக்கள் வெள்ளத்தில் ஊர்ந்து வந்த விஜயகாந்த் உடல்!

மக்கள் வெள்ளத்தில் ஊர்ந்து வந்த விஜயகாந்த் உடல்!

-

 

மக்கள் வெள்ளத்தில் ஊர்ந்து வந்த விஜயகாந்த் உடல்!

மூன்று மணி நேரமாக மக்கள் வெள்ளத்தில் ஊர்ந்து கட்சி அலுவலகம் வந்தது விஜயகாந்த் உடல். காலை 10.30 மணிக்கு விருகம்பாக்கத்தில் புறப்பட்ட ஊர்வலம், மதியம் 01.25 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் வந்தடைந்தது.

விஜயகாந்த் மறைவிற்கு ராமதாஸ் இரங்கல்!

வழிநெடுகிலும் கண்ணீரோடு விஜயகாந்த் மீதான தங்கள் அன்பை மக்கள் வெளிப்படுத்தினர். மக்களின் அஞ்சலிக்கிடையில் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவை மூன்று மணி நேரமாக ஊர்வலம் நடந்தது.

இதனிடையே, விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த பல்வேறு பகுதிகளில் இருந்து ரசிகர்கள் சென்னை கோயம்பேடு வருகை தந்துள்ளனர். கோயம்பேடு மேம்பாலம், கட்சி அலுவலகம் உள்ளிட்டப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர். தே.மு.தி.க. அலுவலகம் முன்பு குவிந்த தொண்டர்களை ஒழுங்குப்படுத்தும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மீண்டும் மக்களைச் சந்திக்கும் ராகுல் காந்தி…. மணிப்பூரில் பாரத் நியாய யாத்திரையைத் தொடங்குகிறார்!

கோயம்பேடு அலுவலகத்தில் இன்றும், நாளையும் விஜயகாந்த் உடலுக்கு மக்கள் அஞ்சலி செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ