Homeசெய்திகள்தமிழ்நாடுவிக்கிரவாண்டி இடைத்தேர்தல் - மதியம் 1 மணி நிலவரப்படி 51% வாக்குகள் பதிவு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – மதியம் 1 மணி நிலவரப்படி 51% வாக்குகள் பதிவு

-

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 51% வாக்குகள் பதிவாகியுள்ளன.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தி.மு.க சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆளும் கட்சியான தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். அ.தி.மு.க. போட்டியில் இருந்து விலகி கொண்டதால், தி.மு.க.வுக்கு போட்டியாக பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் டாக்டர் அபிநயா மற்றும் சுயேட்சைகள் உள்ளிட்ட 29 பேர் போட்டியிடுகின்றனர். அனல் பறந்த தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்த நிலையில், இன்று ஓட்டுப்பதிவு நடைபெற்று வருகிறது.

'மக்களவைத் தேர்தல் 2024'- எந்தெந்த மாநிலங்களில் எத்தனை கட்ட வாக்குப்பதிவு?
இந்த தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்கள் இருக்கிறார்கள். தேர்தல் பணியில் அரசு அலுவலர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள் என 1,355 பேர் ஈடுபட்டுள்ளார்கள். காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த வாக்குப்பதிவானது மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 51% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ