Homeசெய்திகள்தமிழ்நாடு"வாக்கு எண்ணிக்கைக்கு பின் மாற்றம் வரும்"- முத்தரசன் பேட்டி!

“வாக்கு எண்ணிக்கைக்கு பின் மாற்றம் வரும்”- முத்தரசன் பேட்டி!

-

 

"வாக்கு எண்ணிக்கைக்கு பின் மாற்றம் வரும்"- முத்தரசன் பேட்டி!

வாக்கு எண்ணிக்கைக்கு பின் நாட்டில் மாற்றம் ஏற்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் வெற்றிமாறனுடன் கூட்டணி அமைக்கும் ராகவா லாரன்ஸ்….. படப்பிடிப்பு எப்போது?

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் தி.மு.க.வின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை இன்று (ஏப்ரல் 22) காலை 11.00 மணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேரில் சந்தித்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முத்தரசன், “வாக்கு எண்ணிக்கைக்குப் பின் நாட்டில் மாற்றம் ஏற்படும்; தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி கட்சிகளே வெற்றி பெறும். பா.ஜ.க.வுக்கு நாட்டு நலன் முக்கியமல்ல; ஏதாவது பிரச்சனை ஏற்படுத்தி வாக்கு பெற பா.ஜ.க. முயல்கிறது. பூனை சுற்றுவது போல் 9 முறை மோடி தமிழகத்தை சுற்றி வந்தார்; ஆனால் ஒரு பலனும் கிடைக்காது.

அடுத்த போஸ்டர் வெளியீடு…..எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் ‘தலைவர் 171’ படக்குழு!

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன்” எனத் தெரிவித்துளளார்.

MUST READ