Homeசெய்திகள்சென்னை பாடி பிரதான சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு!

சென்னை பாடி பிரதான சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு!

-

- Advertisement -

சென்னை பாடியில் கொரட்டூர், பட்டரவாக்கம் சாலை வழியாக செல்லும்  மத்திய கிழக்கு பிரதான சாலை அமைந்துள்ளது. இது  வில்லிவாக்கம் மற்றும் அண்ணா நகர் செல்லக்கூடிய பிரதான சாலை என்பதால் எந்நேரமும் வாகனங்கள் சென்றவண்ணம் இருக்கும். தற்போது இந்த சாலையில் திடீரென ஏற்பட்ட ராட்சத பள்ளத்தால் சொகுசு கார் ஒன்று சிக்கி விபத்து ஏற்பட்டது.

சென்னை பாடி பிரதான சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு!

இதனை கண்ட பொதுமக்கள் போக்குவரத்து காவல்துறைக்கு தகவல் அறிவிக்கவே அப்பகுதிக்கு வந்த போக்குவரத்து காவல்துறையினர் காரை பள்ளத்தில் இருந்து மீட்டு போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளம் ஏற்பட்டிருக்கக் கூடிய சாலையை தற்காலிகமாக போக்குவரத்து போலீசார் துண்டித்ததால் மாற்று சாலையில் வாகன ஓட்டிகள் அனுமதிக்கப்படு வருகின்றனர்.

MUST READ