தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தி வெளியிட்டிருக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் கோடை வெயில் சுட்டெரிக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் வருகின்ற 11ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடி மின்னல் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கொள்ளிடத்தில் 7 செ.மீ. மழை பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் குடிதாங்கி, மதுரை மாவட்டம் சாட்டையாறில் தலா 5 செமீ மழையும், கோவை மாவட்டம் ஆழியாரில் 4 செமீ மழையும், கன்னியாகுமரி மாவட்டம் சிவலோகம், உதகை, வால்பாறை உள்ளிட்ட 13 இடங்களில் தலா 3 செமீ மழை பெய்து இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் வீரபாண்டி, கோவை பெரியநாயக்கன்பாளையம், கூடலூர், பெரியகுளம் உள்ளிட்ட 12 இடங்களில் தலா 2 செமீ மழை பதிவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.