அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதிபராகியுள்ளார். அவருடைய வெற்றயினால் மூன்றாம் உலகப்போர் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கணித்து வருகின்றனர்.
அமெரிக்கா அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் ஒரு காலத்தில் அணுகுண்டுகளை பற்றி வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்தார். நான் நினைத்தால் ஒரே ஸ்விட்ச் போதும், அது சிவப்பு கலர் ஸ்விட்ச். அதை அழுத்தினால் அணுகுண்டுதான். வடகொரியா காணாமல் போய்விடும் என்று மிரட்டினார்.
சமீபத்தில் கூட ஈரானின் அணு உலை மையங்களை விடக்கூடாது. அதைதான் முதலில் தாக்க வேண்டும் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது மீண்டும் கூறினார்.
மேலும் ஈரான் நாட்டிடம் இருக்கும் அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வேண்டும். எது நடந்தாலும் பின்னர் பார்த்துக்கொள்ளலாம். முதலில் அணு உலைகளை குறி வையுங்கள் என்று டிரம்ப் ஐடியா கொடுத்தார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் இரண்டாவது முறையாக அமெரிக்கா அதிபராக டொனால்ட் ட்ரம்ப் வெற்றிப் பெற்றுள்ளார்.
இந்த தேர்தலில் டிரம்ப் வெற்றிபெற்றதனால் உலக அரசியலில் என்ன நடக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் முன்கூட்டியே கணித்துள்ளனர்.
1. இஸ்ரேலுக்கு தேவையான அனைத்து உதவிகளும் அமெரிக்கா வழங்கும்.
2. இஸ்ரேலின் தலைநகர் ஜெருசலேம் என்று அறிவித்தது டிரம்ப்தான். அதோடு காசா தாக்குதலை இஸ்ரேல் வேகமாக நடத்தி அனைத்தையும் முடிக்க வேண்டும் என்றும் கூறுவார்.
3. மூன்றாம் உலகப்போருக்கு மிக நெருக்கமாக உலக நாடுகள் இருப்பதாக, முக்கியமாக அமெரிக்கா இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார். தற்போது அதை நோக்கி நகர்வதற்கு வாய்ப்புகள் அதிகம்.
4. சீன அதிபர், ரஷ்ய அதிபர், வடகொரியா அதிபர்களிடம் நேரில் சந்தித்து சமாதானம் பேசுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
5. டாலர் வார்த்தகத்தை மேற்கொள்ளாத நாடுகள் மீது தாக்குதல் நடத்த வாய்ப்புகள் உள்ளன.
6. தெற்கு சீனா கடலோர பிரச்சனைகள் மீண்டும் ஏற்படும். இதனால் நிலைமை மோசமாகலாம்.
7. டிரம்ப் ரஷ்யாவிற்கு கொஞ்சம் நெருக்கம் என்பதால். ரஷ்யாவுடன் கொஞ்சம் நட்பாக செல்லும் வாய்ப்புகள் உள்ளன.
8. இவர் சீனாவிற்கு கடும் எதிரி என்பதால் இந்தியாவுடன் கூடுதல் நெருக்கம் காட்டும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதனால் இந்தியாவிற்கு சாதகமான சர்வதேச அரசியல் சூழல் உருவாகும்.
9. இஸ்ரேலுக்கு நேரடியாக இவர் தரும் ஆதரவால் ஈரானுக்கு சிக்கல் ஏற்படும். முக்கியமாக ஈரானின் அணு ஆயுத திட்டங்களுக்கு சிக்கல் ஏற்படும்.
அமெரிக்கா அதிபராக டொனால்ட் ட்ரம்ப் வெற்றிப் பெற்றதனால் உலகில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற போகிறது.