சரத்குமார் நடிக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சுப்ரீம் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் சரத்குமார். இவர் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் அரசியல்வாதியாகவும் வலம் வருகிறார். மேலும் இவர் சினிமாவில் 1980 கால கட்டங்களில் இருந்து ஹீரோவாக தொடர்ந்து பல படங்களில் நடித்து ஏகப்பட்ட வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். தற்போது குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வரும் சரத்குமார் கடைசியாக தி ஸ்மைல் மேன் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் சரத்குமாரின் 150 வது படமாகும். இப்படம் கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் தேதி வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து நடிகர் சரத்குமார், ஏழாம் இரவில் எனும் புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டருடன் வெளியாகி உள்ளது. அந்த போஸ்டரில் இந்த படத்தை அகில் எம் போஸ் இயக்க இருப்பதாகவும் ஆர் ஜி எம் வென்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க இருப்பதாக நடிகர் சரத்குமார் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். எனவே இந்த படம் தொடர்பான மற்ற அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.