spot_imgspot_imgspot_imgspot_img
Homeதிருக்குறள்105 - நல்குரவு மு. கருணாநிதி, விளக்க உரை

105 – நல்குரவு மு. கருணாநிதி, விளக்க உரை

-

- Advertisement -

105 - நல்குரவு மு. கருணாநிதி, விளக்க உரை

1041. இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
          இன்மையே இன்னா தது

கலைஞர் குறல் விளக்கம்வறுமைத் துன்பத்துக்கு உவமையாகக் காட்டுவதற்கு வறுமைத் துன்பத்தைத் தவிர வேறு துன்பம் எதுவுமில்லை.

we-r-hiring

1042. இன்மை எனவொரு பாவி மறுமையும்
          இம்மையும் இன்றி வரும்

கலைஞர் குறல் விளக்கம்பாவி என இகழப்படுகின்ற வறுமைக் கொடுமை ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால் அவருக்கு நிகழ்காலத்திலும், வருங்காலத்திலும் நிம்மதி என்பது கிடையாது.

1043. தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
          நல்குர வென்னும் நசை

கலைஞர் குறல் விளக்கம்ஒருவனுக்கு வறுமையின் காரணமாகப் பேராசை ஏற்படுமேயானால், அது அவனுடைய பரம்பரைப் பெருமையையும், புகழையும் ஒரு சேரக் கெடுத்துவிடும்.

1044. இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
          சொற்பிறக்கும் சோர்வு தரும்

கலைஞர் குறல் விளக்கம்இல்லாமை எனும் கொடுமை, நல்ல குடியில் பிறந்தவர்களிடம் இழிந்த சொல் பிறப்பதற்கான சோர்வை உருவாக்கி விடும்.

1045. நல்குர வென்னும் இடும்பையுள் பல்குரைத்
          துன்பங்கள் சென்று படும்

கலைஞர் குறல் விளக்கம்வறுமையெனும் துன்பத்திற்குள்ளிருந்து பல்வேறு வகையான துன்பங்கள் கிளர்ந்தெழும்.

1046. நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
         சொற்பொருள் சோர்வு படும்

கலைஞர் குறல் விளக்கம்அரிய பல் நூல்களின் கருத்துக்களையும் ஆய்ந்துணர்ந்து சொன்னாலும். அதனைச் சொல்பவர் வறியவராக இருப்பின் அக்கருத்து எடுபடாமற் போகும்.

1047. அறஞ்சாரா நல்குர வீன்றதா யானும்
          பிறன்போல நோக்கப் படும்

கலைஞர் குறல் விளக்கம்வறுமை வந்தது என்பதற்காக, அறநெறியிலிருந்து விலகி நிற்பவனை. அவன் தாய்கூட அயலானைப் போல்தான் கருதுவாள்.

1048. இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
          கொன்றது போலும் நிரப்பு

கலைஞர் குறல் விளக்கம்கொலை செய்வதுபோல நேற்றுக் கொடுமைப் படுத்திய வறுமை. தொடர்ந்து இன்றைக்கும் வராமல் இருக்க வேண்டுமே என்று வறியவன் ஏங்குவான்.

1049. நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
          யாதொன்றும் கண்பா டரிது

கலைஞர் குறல் விளக்கம்நெருப்புக்குள் படுத்துத் தூங்குவதுகூட ஒரு மனிதனால் முடியும்; ஆனால் வறுமை படுத்தும் பாட்டில் தூங்குவது என்பது இயலாத ஒன்றாகும்.

1050. துப்புர வில்லார் துவரத் துறவாமை
          உப்பிற்கும் காடிக்கும் கூற்று

கலைஞர் குறல் விளக்கம்ஒழுங்குமுறையற்றதால் வறுமையுற்றோர், முழுமையாகத் தம்மைத் துறக்காமல் உயிர்வாழ்வது, உப்புக்கும் கஞ்சிக்கும்தான் கேடு.

MUST READ