spot_imgspot_imgspot_imgspot_img

106 – இரவு, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

-

- Advertisement -

106 - இரவு கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1051. இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
          அவர்பழி தம்பழி அன்று

கலைஞர் குறல் விளக்கம்கொடுக்கக்கூடிய தகுதி படைத்தவரிடத்திலே ஒன்றைக் கேட்டு, அதை அவர் இருந்தும் இல்லையென்று சொன்னால், அப்படிச் சொன்னவருக்குத்தான் பழியே தவிர கேட்டவருக்கு அல்ல.

we-r-hiring

1052. இன்பம் ஒருவற் கிரத்தல் இரந்தவை
          துன்பம் உறாஅ வரின்

கலைஞர் குறல் விளக்கம்வழங்குபவர், வாங்குபவர் ஆகிய இருவர் மனத்திற்கும் துன்பம் எதுவுமின்றி ஒருபொருள் கிடைக்குமானால், அப்பொருள் இரந்து பெற்றதாக இருப்பினும் அதனால் இன்பமே உண்டாகும்.

1053. கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின்
          றிரப்புமோர் ஏஎர் உடைத்து

கலைஞர் குறல் விளக்கம்உள்ளதை ஒளிக்காத உள்ளமும், கடமையுணர்வும் கொண்டவரிடத்தில் தனது வறுமை காரணமாக இரந்து கேட்பதும் பெருமை யுடையதே யாகும்.

1054. இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
          கனவிலும் தேற்றாதார் மாட்டு

கலைஞர் குறல் விளக்கம்இருக்கும்போது இல்லையென்று கைவிரிப்பதைக் கனவிலும் நினைக்காதவரிடத்தில், இல்லாதார் இரந்து கேட்பது பிறருக்கு ஈவது போன்ற பெருமையுடைய தாகும்.

1055. கரப்பிலார் வையகத் துண்மையாற் கண்ணின்
          றிரப்பவர் மேற்கொள் வது

கலைஞர் குறல் விளக்கம்உள்ளதை இல்லையென்று மறைக்காமல் வழங்கிடும் பண்புடையோர் உலகில் இருப்பதால்தான் இல்லாதவர்கள், அவர்களிடம் சென்று இரத்தலை மேற்கொண்டுள்ளனர்.

1056. கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
          யெல்லா மொருங்கு கெடும்.

கலைஞர் குறல் விளக்கம்இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்திடும் இழிநிலை இல்லாதவர்களை  கண்டாலே, இரப்போரின் வறுமைத் துன்பம் அகன்று விடும்.

1057. இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
          உள்ளுள் உவப்ப துடைத்து

கலைஞர் குறல் விளக்கம்இழித்துப் பேசாமலும், ஏளனம் புரியாமலும் வழங்கிடும் வள்ளல் தன்மை உடையவர்களைக் காணும்போது, இரப்போர் உள்ளம் மகிழ்ச்சியால் இன்பமுறும்.

1058. இரப்பாரை யில்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
          மரப்பாவை சென்றுவந் தற்று

கலைஞர் குறல் விளக்கம்வறுமையின் காரணமாக யாசிப்பவர்கள், தம்மை நெருங்கக் கூடாது என்கிற மனிதர்களுக்கும். மரத்தால் செய்யப்பட்டு இயக்கப்படும் பதுமைகளுக்கும் வேறுபாடே இல்லை.

1059. ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
          மேவார் இலாஅக் கடை

கலைஞர் குறல் விளக்கம்இரந்து பொருள் பெறுபவர் இல்லாத நிலையில், பொருள் கொடுத்துப் புகழ் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாமற் போய்விடும்.

1060. இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
          தானேயும் சாலும் கரி

கலைஞர் குறல் விளக்கம்இல்லை என்பவரிடம் இரப்பவன் கோபம் கொள்ளக் கூடாது. தன்னைப் போலவே பிறர் நிலைமையும் இருக்கலாம் என்பதற்குத் தன் வறுமையே சான்றாக இருக்கிறதே.

MUST READ