Homeதிருக்குறள்69 - தூது ,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

69 – தூது ,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

-

- Advertisement -

69. தூது, கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

681. அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
        பண்புடைமை தூதுரைப்பான் பண்பு

கலைஞர் குறல் விளக்கம்அன்பான குணமும், புகழ்வாய்ந்த குடிப்பிறப்பும். அரசினர் பாராட்டக்கூடிய நல்ல பண்பாடும் பெற்றிருப்பதே தூதருக்குரிய தகுதிகளாகும்.

682. அன்பறி வாராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்
        கின்றி யமையாத மூன்று

கலைஞர் குறல் விளக்கம் – தூது செல்பவருக்குத் தேவைப்படும் மூன்று முக்கியமான பண்புகள் அன்பு, அறிவு, ஆராய்ந்து பேசும் சொல்வன்மை.

683. நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
        வென்றி வினையுரைப்பான் பண்பு

கலைஞர் குறல் விளக்கம் – வேற்று நாட்டாரிடம், தனது நாட்டுக்கு வெற்றி ஏற்படும் வண்ணம் செய்தி உரைத்திடும் தூதுவன் நூலாய்ந்து அறிந்தவர்களிலேயே வல்லவனாக இருத்தல் வேண்டும்.

684. அறிவுரு வாராய்ந்த கல்வியிம் மூன்றன்
        செறிவுடையான் செல்க வினைக்கு

கலைஞர் குறல் விளக்கம்தூது உரைக்கும் செயலை மேற்கொள்பவர் அறிவு, தோற்றப் பொலிவு, ஆய்ந்து தெளிந்த கல்வி ஆகிய மூன்றும் நிறைந்தவராக இருத்தல் வேண்டும்.

685. தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
         நன்றி பயப்பதாந் தூது

கலைஞர் குறல் விளக்கம் – சினத்தைத் தூண்டாமல் மகிழத்தக்க அளவுக்குச் செய்திகளைத் தொகுத்தும், தேவையற்ற செய்திகளை ஒதுக்கியும், நல்ல பயனளிக்கும் விதமாகச் சொல்லுவதே சிறந்த தூதருக்கு அழகாகும்.

686. கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
        தக்க தறிவதாந் தூது

கலைஞர் குறல் விளக்கம்சுற்றறிவாளனாகவும், பகைவரின் கனல்கக்கும் பார்வைக்கு அஞ்சாதவனாகவும், உள்ளத்தில் பதியுமாறு உரைப்பவனாகவும், உரிய நேரத்தில் உணரவேண்டியதை உணர்ந்து கொள்வபனாகவும் இருப்பவனே சிறந்த தூதனாவான்.

687. கடனறிந்து காலங் கருதி இடனறிந்
        தெண்ணி உரைப்பான் தலை

கலைஞர் குறல் விளக்கம்  – ஆற்றவேண்டிய கடமையை அறிந்து, அதற்குரிய காலத்தையும் இடத்தையும் தேர்ந்து, சொல்ல வேண்டியதைத் தெளிவாகச் சிந்தித்துச் சொல்பவனே சிறந்த தூதனாவான்.

688. தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
        வாய்மை வழியுரைப்பான் பண்பு

கலைஞர் குறல் விளக்கம்  – துணிவு, துணை, தூய ஒழுக்கம் ஆகிய இம்மூன்றும் தூதுவர்க்குத் தேவையானவைகளாகும்.

689. விடுமாற்றம் வேந்தர்க் குரைப்பான் வடுமாற்றம்
        வாய்சோரா வன்க ணவன்.

கலைஞர் குறல் விளக்கம்  – ஓர் அரசின் கருத்தை மற்றோர் அரசுக்கு எடுத்துரைக்கும் தூதன். வாய்தவறிக்கூட குற்றம் தோய்ந்த சொற்களைக் கூறிடாத உறுதி படைத்தவனாக இருத்தல் வேண்டும்.

690. இறுதி பயப்பினும் எஞ்சா திறைவற்
        குறுதி பயப்பதாம் தூது

கலைஞர் குறல் விளக்கம்  – தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும், அதை எண்ணிப் பயந்து விடாமல் உறுதியுடன் கடமையாற்றுகிறவனே தன்னுடைய தலைவனுக்கு நம்பிக்கையான தூதனாவான்.

MUST READ