Homeதிருக்குறள்78,படைச் செருக்கு, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

78,படைச் செருக்கு, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

-

- Advertisement -

78,படைச் செருக்கு, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

771. என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
        முன்னின்று கல்நின் றவர்

 கலைஞர் குறல் விளக்கம்போர்க்களத்து வீரன் ஒருவன், “பகைவர்களே என் தலைவனை எதிர்த்து நிற்காதீர்; அவனை எதிர்த்து நடுகல்லாய்ப் போனவர்கள் பலர்” என முழங்குகிறான்.

772.  கான முயலெய்த அம்பினில் யானை
         பிழைத்தவேல் ஏந்தல் இனிது

 கலைஞர் குறல் விளக்கம்வலிவு மிகுந்த யானைக்குக் குறிவைத்து, அந்தக் குறி தப்பினாலும்கூட அது, வலிவற்ற முயலுக்குக் குறிவைத்து அதனை வீழ்த்துவதைக் காட்டிலும் சிறப்புடையது.

773. பேராண்மை என்ப தறுகனொன் றுற்றக்கால்
        ஊராண்மை மற்றதன் எஃகு

 கலைஞர் குறல் விளக்கம்பகைவர்க்கு அஞ்சாத வீரம் பெரும் ஆண்மை என்று போற்றப்படும். அந்தப் பகைவர்க்கு ஒரு துன்பம் வரும்போது அதைத் தீர்க்க உதவிடுவது ஆண்மையின் உச்சம் எனப் புகழப்படும்.

774. கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
        மெய்வேல் பறியா நகும்

கலைஞர் குறல் விளக்கம்கையிலிருந்த வேலினை யானையின் மீது வீசி விட்டதால் களத்தில் போரினைத் தொடர வேறு வேல் தேடுகிற வீரன். தன் மார்பின்மீதே ஒரு வேல் பாய்ந்திருப்பது கண்டு மகிழ்ந்து அதனைப் பறித்துப் பகையை எதிர்த்திடுகின்றான்.

775. விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்
        ஓட்டன்றோ வன்க ணவர்க்கு

 கலைஞர் குறல் விளக்கம்களத்தில் பகைவர் வீசிடும் வேல் பாயும்போது விழிகளை இமைத்து விட்டால்கூட அது புறமுதுகுகாட்டி ஓடுவதற்கு ஒப்பாகும்.

776. விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
        வைக்குந்தன் நாளை எடுத்து

 கலைஞர் குறல் விளக்கம்ஒரு வீரன், தான் வாழ்ந்த நாட்களைக் கணக்குப் பார்த்து அந்த நாட்களில் தன்னுடலில் விழுப்புண்படாத நாட்களை யெல்லாம் வீணான நாட்கள் என்று வெறுத்து ஒதுக்குவான்.

777. சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
        கழல்யாப்புக் காரிகை நீர்த்து

 கலைஞர் குறல் விளக்கம்சூழ்ந்து பரவிடும் புகழை மட்டுமே விரும்பி உயிரைப் பற்றிக் கவலைப்படாத வீரர்களின் காலில் கட்டப்படும் வீரக்கழல் தனிப் பெருமை உடையதாகும்.

778. உறினுயிர் அஞ்சா மறவர் இறைவன்
        செறினுஞ்சீர் குன்றல் இலர்

 கலைஞர் குறல் விளக்கம்தலைவன் சினந்தாலும் சிறப்புக் குறையாமல் கடமை ஆற்றுபவர்கள்தான். போர்க்களத்தில் உயிரைப்பற்றிக் கலங்காத வீர மறவர்கள் எனப் போற்றப்படுவர்.

779. இழைத்த திகவாமைச் சாவாரை யாரே
        பிழைத்த தொறுக்கிற் பவர்

 கலைஞர் குறல் விளக்கம்சபதம் செய்தவாறு களத்தில் சாவதற்குத் துணிந்த வீரனை யாராவது இழித்துப் பேச முடியுமா? முடியாது.

780. புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்கா
        டிரந்துகோட் டக்க துடைத்து

 கலைஞர் குறல் விளக்கம்தன்னைக் காத்த தலைவனுடைய கண்களில் நீர் பெருகுமாறு வீரமரணம் அடைந்தால், அத்தகைய மரணத்தை யாசித்தாவது பெற்றுக் கொள்வதில் பெருமை உண்டு.

MUST READ