- Advertisement -
தனியார் நிதி நிறுவனமான பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்திற்கு 2 கோடி IRDAI அபராதம் விதித்துள்ளது.
இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (Irdai) விதிமுறைகளை மீறியதாகக் கூறி, பஜாஜ் ஃபைனான்ஸ் மீது ரூ. 2 கோடியும், ஏகான் லைஃப் இன்சூரன்ஸ் (தற்போது பந்தன் லைஃப் என அழைக்கப்படுகிறது) மீது ரூ. 1 கோடியும் அபராதம் விதித்துள்ளது.

2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரையிலான கணக்குகளை IRDAI ஆய்வு செய்துள்ளது. அப்போது அந்நிறுவனம் விதிமீறல்களில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, தலா 31 கோடி விதம் 2 பகுதிகளாக அந்நிறுவனத்திற்கு IRDAI அபராதம் விதித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.


