spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

-

- Advertisement -

ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது

இது தொடர்பாக அரசு போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், திருப்பூருக்கு
சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, கிளாம்பாக்கத்தில் ஆகஸ்ட் 14ஆம் தேதி 470 சிறப்பு பேருந்துகளும்,
ஆகஸ்ட் 16, 17 ஆகிய நாட்களில் 365 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

we-r-hiring

மேலும் சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர்,பெங்களூரு ஆகிய இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கட உள்ளன. அதன்படி, நாளை மறுநாள் கோயம்பேட்டில் இருந்து 70 சிறப்பு பேருந்துகளும், ஆகஸ்ட் 16, 17 ஆகியநாட்களில் 65 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

இதேபோல், தொடர் விடுமுறையைமுன்னிட்டு பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவையிலிருந்து தமிழ்நாட்டின்பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வரும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை,
பெங்களூரு திரும்ப சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிட்டு உள்ளதாகவும் அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது

MUST READ