Homeசெய்திகள்சினிமா'கோட்' படத்தில் விஜயுடன் நடித்த காட்சி குறித்து பேசிய சிவகார்த்திகேயன்!

‘கோட்’ படத்தில் விஜயுடன் நடித்த காட்சி குறித்து பேசிய சிவகார்த்திகேயன்!

-

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன், கோட் படத்தில் விஜயுடன் நடித்த காட்சி குறித்து பேசி உள்ளார்.'கோட்' படத்தில் விஜயுடன் நடித்த காட்சி குறித்து பேசிய சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி தினத்தன்று அமரன் எனும் திரைப்படம் வெளியானது. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாக்கப்பட்டிருந்த இந்த படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது. ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில் கிட்டத்தட்ட 300 கோடி வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் சிவகார்த்திகேயன். ஒரே ஒரு காட்சிக்கு மட்டும் தோன்றினாலும் அது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அப்போது சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் ஆகிய இருவருக்குமான வசனம் பெரிய அளவில் ரீச் ஆனது. அதன் பிறகு தளபதி விஜய் இடத்தை சிவகார்த்திகேயன் பிடித்திருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். 'கோட்' படத்தில் விஜயுடன் நடித்த காட்சி குறித்து பேசிய சிவகார்த்திகேயன்!இந்நிலையில் இது தொடர்பாக நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதன்படி அவர் பேசியதாவது, “கோட் படத்தில் இடம்பெற்ற அந்த காட்சி பற்றி எனக்கு முன்பு தெரியாது. அதற்கு முந்தைய நாள் தான் எனக்கு சீன் பேப்பர் கிடைத்தது. அதில் இதை பார்த்துக்கோங்க சுடக்கூடாது என்று தான் வசனம் எழுதியிருந்தார் வெங்கட் பிரபு. தளபதி தான் அதை மாற்றி துப்பாக்கிய பிடிங்க சிவா என்று சொன்னார். எனக்கு அப்போது ஆச்சரியமாக இருந்தது. தளபதி சொன்னதை நான் அவருடைய அன்பாக தான் பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ