spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதமிழ்நாட்டில் 'புஷ்பா 2' படத்திற்காக 800 திரையரங்குகள் ஒதுக்கீடு!

தமிழ்நாட்டில் ‘புஷ்பா 2’ படத்திற்காக 800 திரையரங்குகள் ஒதுக்கீடு!

-

- Advertisement -

புஷ்பா 2 திரைப்படம் தமிழ்நாட்டில் 800 திரையரங்குகளில் திரையிடப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழ்நாட்டில் 'புஷ்பா 2' படத்திற்காக 800 திரையரங்குகள் ஒதுக்கீடு!

கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான புஷ்பா-1 படத்தின் பிரம்மாண்ட வெற்றி தற்போது உருவாகி இருக்கும் புஷ்பா 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பை மிகப்பெரிய அளவில் அதிகப்படுத்தி உள்ளது. அதே சமயம் புஷ்பா 2 – தி ரூல் படத்திலிருந்து அடுத்தடுத்து வெளியான டீசரும் ட்ரைலரும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பிரம்மாண்ட பட்ஜெத்தில் உருவாகியுள்ள இந்த படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்திருக்கிறார். சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்திருக்கும் இந்த படமானது நாளை (டிசம்பர் 5) தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக முழு வீச்சில் தயாராகி வருகிறது. தமிழ்நாட்டில் 'புஷ்பா 2' படத்திற்காக 800 திரையரங்குகள் ஒதுக்கீடு!அதன்படி இந்நிலையில் இந்த படமானது நாளை உலக அளவில் கிட்டத்தட்ட 12,000 திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மட்டுமே இப்படம் 800 திரையரங்குகளில் வெளியாகிறதாம். தமிழ்நாட்டில் இந்த படம் நாளை காலை 9 மணி முதல் திரையிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே டிக்கெட் முன்பதிவிலும் மாஸ் காட்டி வரும் புஷ்பா 2 திரைப்படம் புஷ்பா 1 படத்தைப் போல் அதிக வசூலை வாரிக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ