Homeசெய்திகள்சென்னைவால்டாக்ஸ் ரோட்டில் திருநங்கைகள் கஞ்சா மற்றும் மது போதையில் காவலரிடம் வாக்குவாதம்…!

வால்டாக்ஸ் ரோட்டில் திருநங்கைகள் கஞ்சா மற்றும் மது போதையில் காவலரிடம் வாக்குவாதம்…!

-

- Advertisement -

வால்டாக்ஸ் ரோட்டில் எதிர்திசையில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த 3 திருநங்கைகளை தட்டிக் கேட்ட சிறப்பு உதவி ஆய்வாளரிடமும், நுண்ணறிவு பிரிவு தலைமை காவலரிடமும் கஞ்சா மற்றும் மது போதையில் இருந்த திருநங்கைகள் வாக்குவாதம் செய்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

வால்டாக்ஸ் ரோட்டில் திருநங்கைகள் கஞ்சா மற்றும் மது போதையில் காவலரிடம் வாக்குவாதம்…!வால்டாக்ஸ் ரோட்டில் வாகன தணிக்கை செய்யும் இடத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் மணிவண்ணன் போலீசார் சகிதம் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது சென்ட்ரல்-வால்டாக்ஸ் ரோட்டில் எதிர்திசையில் ஹெல்மெட் அணியாமல் (Dio) வாகனத்தில் வந்த 3 திருநங்கைகள் வந்ததை தொடர்ந்து ஏன் எதிர்திசையில் வருகிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

வால்டாக்ஸ் ரோட்டில் திருநங்கைகள் கஞ்சா மற்றும் மது போதையில் காவலரிடம் வாக்குவாதம்…!கஞ்சா மற்றும் மது போதையில் இருந்த  திருநங்கைகள் ரோட்டில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு அருவருக்கத்தக்க வகையில் ஒருமையில் பேசிக் கொண்டு வாக்குவாதம் செய்துள்ளனர்.

தொழில்நுட்ப கோளாறால் சென்னையில் 2 விமானங்கள் தரையிறக்கம்… நல்வாய்ப்பாக உயிர் தப்பிய பயணிகள்!

நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் வீடியோ பதிவு செய்ததை அடுத்து  காவலரை அசிங்கமாக திட்டிய தோடு வேலையை விட்டு தூக்கிவிடுவோம்…!!! பணம் கேட்டீர்கள் என டிவிட்டரில் வீடியோ பதிவு செய்து சட்டையை கழட்டுவோம்..!! என கூறி  தகராறில் ஈடுபட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது.

MUST READ