Homeசெய்திகள்தமிழ்நாடுஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!

-

- Advertisement -

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவனின் மறைவை அடுத்து அந்த தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறும் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.பொதுமக்கள் காலை முதலே வாக்குச்சாவடியில் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் வேட்பாளர் சீதா உள்ளிட்ட 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள 2 லட்சத்து 26 ஆயிரத்து 537 வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக 237 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 9 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டு, அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஈரோடு கிழக்கு தொகுதியின் எல்லைகளிலும், ஈரோடு நகரின் முக்கிய பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகிறனர்.அனைத்து வாக்கு சாவடிகளிலும் பொதுமக்கள் அமைதியாக வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். ஈரோடு சூரம்பட்டி நான்கு சாலை சந்திப்பு அருகே உள்ள தனியார் பள்ளியில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் தனது வாக்கினை செலுத்தினார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமிக்கு, ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு இல்லாததால் அவர் இன்று வாக்களிக்கவில்லை.

மாவட்ட ஆட்சித் தலைவரும் ,தேர்தல் அதிகாரியமான ராஜகோபால் சுன்கரா, ஈரோடு சம்பத் நகரில், தனியார் பள்ளி அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் முதல் நபராக வந்து வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா இன்று மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்குள் வரும் அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்

MUST READ