சுந்தர்.சி பட நடிகை, சிரஞ்சீவியின் புதிய படத்தில் இணைய இருப்பதாக
தகவல் வெளியாகி இருக்கிறது.
தெலுங்கு சினிமாவில் கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணியின் நடிகராக வலம் வருபவர் நடிகர் சிரஞ்சீவி. இவர் தற்போது தனது 157 வது திரைப்படத்தில் நடிக்கிறார். இதனை அனில் ரவிபுடி இயக்க கோல்ட் பாக்ஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், சைன் ஸ்கிரீன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இவர்களில் இந்த படத்தில் கதாநாயகியாக யார் நடிக்கப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதன்படி நடிகை நயன்தாரா இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி வந்தது. அதற்கு நயன்தாரா ரூ.18 கோடி சம்பளம் கேட்டதாகவும், இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தில் மற்றுமொரு கதாநாயகி நடிக்க உள்ளாராம். அதாவது நடிகை கேத்தரின் தெரசா இந்த படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேத்தரின் தெரசா தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான கலகலப்பு 2, கேங்கர்ஸ் ஆகிய படங்களில் நடித்திருந்தார். இது தவிர சிரஞ்சீவி நடிப்பில் வெளியான வால்டேர் வீரய்யா படத்திலும் கேத்தரின் தெரசா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.