சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் கடைசியாக அமரன் திரைப்படம் வெளியாகி இந்திய அளவில் இமாலய வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் மதராஸி படத்தில் நடிக்கிறார். இந்த படமானது 2025 செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. அதேசமயம் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி எனும் திரைப்படத்திலும் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படமானது அடுத்த ஆண்டில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சிவகார்த்திகேயன் தன்னுடைய அடுத்தடுத்த படங்களை மிக கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார். அந்த வகையில் பல வெற்றி பட இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார். அதன்படி சிபி சக்கரவர்த்தி, வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்பராஜ், லோகேஷ் கனகராஜ், விநாயக் சந்திரசேகரன் ஆகியோர் சிவகார்த்திகேயனின் லைன் அப்பில் இருக்கின்றனர். இந்நிலையில் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அடுத்திங்கு பிறப்பொன்று
அமைந்தாலும் நான் உந்தன்
மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே
அதை நீயே தருவாயேஅம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையேHappy 70th birthday Amma❤️❤️🤗🤗 pic.twitter.com/dB3XwOQBA1
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) May 8, 2025
அந்த பதிவில், “அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன் மகனாக பிறக்கின்ற வரம் வேண்டுமே.. அதை நீயே தருவாயே .. அம்மா என்றழைக்காத உயிரில்லையே.. அம்மாவை வணங்காத உயர்வில்லையே. அம்மாவிற்கு 70வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டு தன் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படமும் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள பதிவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.