ஆளுநர் மாளிகை செலவுகளில் விதிமீறல்- நிதியமைச்சர்
ஆளுநர் மாளிகைக்கு 3 வகைகளில் அரசு நிதி ஒதுக்குவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் மாளிகைக்கு நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “ஆளுநர் செயலகத்துக்கு ரூ.2.41 கோடியாக இருந்த நிதி ஒதுக்கீடு ரூ.3.6 கோடியாக உயர்த்தப்பட்டது. ஆளுநர் மாளிகைக்கான நிதி வெறும் ரூ.1 லட்சமாக இருந்ததை 3 மாதங்களில் ரூ.5 கோடி என அதிமுக ஆட்சியில் மாற்றிவிட்டனர். ஆளுநர் மாளிகைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.5 கோடியாக உயர்த்தப்பட்டபோதுதான் விதிகள் மீறப்பட்டுள்ளன.
ஆளுநர் மாளிகைக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.18 கோடியில் ரூ.11.32 கோடி எங்கே செலவிடப்பட்டது என்பது தெரியவில்லை. அட்சய பாத்திரம் என்று பெயரை சொல்லி ஆளுநருடைய ஹவுஸ் கோல்டு கணக்கில்தான் மாற்றப்படுள்ளது. ஆளுநர் மாளிகை செலவுகளில் விதிமீறல்கள் நடைபெற்றுள்ளது. செப்டம்பர் 2021க்கு பிறகு ஆளுநர் மாளிகளையில் இருந்து வந்த பில்கள் அதிர்ச்சி அளிக்கின்றன” எனக் குற்றஞ்சாட்டினார்.