spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா63 வருடங்கள் கழித்து ட்ரெண்டாகி வரும் மலையாள பாடல்!

63 வருடங்கள் கழித்து ட்ரெண்டாகி வரும் மலையாள பாடல்!

-

- Advertisement -

63 வருடங்கள் கழித்து மலையாள பாடல் ஒன்று தற்போது ட்ரெண்டாகி வருகிறது.63 வருடங்கள் கழித்து ட்ரெண்டாகி வரும் மலையாள பாடல்!

கடந்த 1962 ஆம் ஆண்டு வெளியான சினேகதீபம் எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஒன்னாம் தரம் பலூன் தரான், ஒரு நல்ல பிபி தரான்’ எனும் பாடல் 63 வருடங்கள் கழித்து இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அதாவது இந்த பாடலை ஒரு சிறுமி பொம்மையை பார்த்து பாடுவது போல் காட்சிகளும் பாடல் வரிகளும் அமைந்திருக்கும். அந்த குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர் கேரளாவில் புகழ்பெற்ற நடன கலைஞர் குரு கோபிநாத்தின் மகள் வினோதினி சசிமோகன். இவர் பல மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் தேவி கன்னியாகுமரி என்ற படத்தில் ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார். இவர் கமல்ஹாசன் உடன் இணைந்து கண்ணும் கரளும் இடம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

we-r-hiring

இவருடைய பழைய பாடல் இப்போது ட்ரெண்டாகி வருவது குறித்து பேசிய வினோதினி சசிமோகன், “தான் ஐந்து நடித்து வெளியான இந்த பாடல் 63 வருடங்கள் கழித்து சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருவது தனக்கு ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாக கூறியிருக்கிறார். மேலும் மலையாளிகள் மட்டுமல்லாமல் தமிழர்களும் இந்தப் பாடலுக்கு ரீல்ஸ் செய்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

சமூக வலைதளங்களை பொருத்தவரை ட்ரெண்டிங் என்பது மொழி, மாநிலம், நாடு, காலங்களையும் கடந்தாகவே பார்க்கப்படுகிறது. சமீபத்தில் கன்னடம் குறித்து கமல் பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில் சினிமாவிற்கு மொழி இனம் காலம் என எதுவும் கிடையாது என்பதை உணர்த்தும் வகையில் இணையவாசிகளின் இந்த செயல் அமைந்திருக்கிறது.

MUST READ